கடாய் பனீர்

தேவையான பொருட்கள்:

பனீர் துண்டுகள் - 100 கிராம்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுபல் - 5
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து குளிர்ந்த நீரில் 1 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலா மற்றும் 
உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*சப்பாத்தி,நாண் இவற்றிற்க்கு தொட்டுக் கொள்ள நன்றாகயிருக்கும்.

Related Videos