ஆந்திரா சாம்பார் | Andhra Sambar

தேவையான பொருட்கள்:

து.பருப்பு - 1/3 கப்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் -1

நறுக்கிய தக்காளி - 1

புளிகரைசல் -1/2 கப்

முருங்கைக்காய் -1

கேரட் -2

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

கசகசா - 1 டீஸ்பூன்

கொப்பரைத்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு -1/2 டீஸ்பூன்

சீரகம் -1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

காய்ந்த மிளகாய் -1

செய்முறை விளக்கம்:

*குக்கரில் துவரம்பருப்பை  மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.வெந்ததும் நறுக்கிய காய்கள் சேர்த்து  2 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி  அரைத்த விழுது, சாம்பார் பொடி மற்றும் புளிகரைசல் சேர்த்து  கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் வேகவைத்த காய் பருப்பு கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து  கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்

Related Videos