வாயில் போட்டதும் கரையும் பாதுஷா செய்முறை......

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்

வெண்ணெய் - 1/2 கப்

சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:சர்க்கரை - 1/2 கப்

தண்ணீர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை விளக்கம்:

* மைதா மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும்.

*ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய், தயிர் மற்றும் சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.

*மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.இந்த பதமே சரியாக இருக்கும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும்.

*குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்

*பின்பு நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும்.

*பானில் எண்ணெயை காயவைக்கவும்.மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது,எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.

டேஸ்டியான முட்டைகோஸ் பகோடா செய்வது எப்படி??

* பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும் பானை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது குங்குமப்பூ மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

* பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும் பானை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது குங்குமப்பூ மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.

*சர்க்கரை பாகு காய்ந்ததும் பரிமாறவும்.

பின் குறிப்பு:

*செய்த அன்றைக்கு சாப்பிடுவதைவிட மறுநாள் சாப்பிட நன்றாகயிருக்கும்.

*பட்டரின் அளவைக்குறைத்தால் பாதுஷா சரியாக வராது.

*வடிவத்தை அவரவர் விருப்பம்போல் செய்துக்கொள்ளலாம்.சர்க்கரை பாகு மீதமிருந்தால் பாதுஷா போல் ஊற்றி விடவும்,காய்ந்த பிறகு பார்க்கும் போது சர்க்கரை பூத்து அழகாய் இருக்கும்.

*விரும்பினால் இதன்மேல் சாக்லேட் வெரிமிசில்லியை தூவி விடலாம்.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Baathusha Receipe in Tamil | Sweet Baathusha Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos