செட்டிநாடு நண்டு வறுவல் | Chettinad Crab Varuval

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த நண்டு - 7

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் -7

செய்முறை விளக்கம்:

*காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.தேங்காய்த்துறுவல், கசகசா, பெருஞ்சீரகம் மற்றும் கரம்மசாலா இவற்றையும் விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் காய்ந்த மிளகாய் விழுது என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள், உப்பு மற்றும் நண்டு சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*நண்டு வெந்ததும் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

பின் குறிப்பு:

*நண்டு சீக்கிரம் வெந்துவிடும் அதனால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*எப்போழுதும் நண்டை சமைக்கும் நேரத்தில்தான் சுத்தம் செய்து சமைக்கவேண்டும்.முன்பே சுத்தம் செய்துவிட்டால் நண்டின் சுவையே மாறிவிடும்.

*இதில் காய்ந்த மிளகாய் பதில் வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.

Related Videos