பிடி கருணை கருவாட்டு குழம்பு | Pidi Karunai Karuvattu(Dry Fish )Kuzhambu

தேவையான பொருட்கள்:

பிடி கருனை -1/4 கிலோ
கருவாடு - 5 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் -1
பூண்டுப்பல் -8
சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி -1
உப்பு-தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை விளக்கம்:

*பிடிகருணையை மண்ணில்லாமல் நன்கு கழுவி தேங்காய் ஒடு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

*தேங்காய் ஒடு சேர்த்து வேகவைப்பது கருணை கிழங்கு அரிப்பில்லாமல் இருக்கும்.

*புளிபேஸ்டினை 2 கப் நீர் ஊற்றி உப்பு,தக்காளி,சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

*புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்தபின் சுத்தம் செய்த கருவாடு,வேகவைத்த கிழங்கினை துண்டுகளாக அரிந்து சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.


பின் குறிப்பு :


*நான் சேர்த்திருப்பது வஞ்சிரம் கருவாடு.

*கருவாடு சேர்க்காமல் இதேபோல் பிடிகருணை காரகுழம்பு செய்யலாம்.

*பிடிகருணை சேர்க்கும்போது வேறு எந்தகாயும் சேர்க்கவேண்டாம்.

Related Videos