பூசணிக்காய் மோர் குழம்பு | Ash gourd Mor Kuzhambu

தேவையான பொருட்கள்: 

வெள்ளை பூசணிக்காய் துண்டுகள்- 1 கப்

தயிர் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 1

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்

தனியா- 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி -1 சிறுதுண்டு

சீரகம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*துவரம்பருப்பு, பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தயிரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கடைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய்விட்டு தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் ஊறவைத்த அரிசி பருப்பு இவைகளை வறுத்து இதனுடன் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் பூசணிக்காய் மற்றும் துண்டுகளாகிய தக்காளி போட்டு முழ்குமளவு நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்தவிழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.நன்கு கொதித்ததும் கடைந்த தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி கடுகு+கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

Related Videos