நண்டு குருமா | Crab Kurma

தேவையான பொருட்கள்:

நண்டு - 3/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் - 4
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1டீஸ்பூன்

தாளிக்க:
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை விளக்கம்:

*நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும்.அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.

*வெங்காயம், தக்காளி மற்றும் கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும்,பொரிந்ததும் வெங்கயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும்.தேவையானளவு உப்பு சேர்க்கவும்.

*கொதித்தபின் நண்டை போடவும்.

*கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

*வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.

Related Videos