மீன் பிரியாணி | Fish Biryani

தேவையான பொருட்கள்:

பாகம் - 1
மீன் துண்டுகள் -1/2 கிலோ

முட்டை -2

எலுமிச்சை சாரு - 1 டீஸ்பூன்

கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

வரமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மிளகு,சீரகத்தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிப்பதற்க்கு

 பாகம் - 2
பாஸ்மதி - 3 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 10

கேரட் - 1

இஞ்சி பூண்டு  விழுது - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல் - 1 கைப்பிடி

பால் ,தயிர் - தலா 1 கப்

எலுமிச்சைபழம் - 1

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லிதழை - 1 கட்டு

நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

 தாளிக்க:

பட்டை -1

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

பிரியாணி இலை -2

செய்முறை விளக்கம்:

*மீனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுதுஎலுமிச்சை சாறுமிளகாய்த்தூள்மஞ்சள்தூள்மிளகுசீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 ணிநேரம் ஊறவிடவும்.

*பின் எண்ணெய் விட்டு 2 பக்கமும் உடையாமல்  முறுகலாக பொரித்தெடுக்கவும்.

 *முட்டைகடலைமாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.

 *வேறொரு கடாயில் பொரித்த மீன் துண்டுகளை முட்டை கலவையில் நன்கு நனைத்து 2 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.மீதமுள்ள முட்டை கலவையை மீனிலேயே ஊற்றி பொரித்தெடுக்கவும்.

 *இப்பொழுது பிரியாணிக்கான மீன் ரெடி!!

*வெங்காயத்தை நீளவாக்கிலும்,பச்சை மிளகாயை கீறியும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.தேங்காய் துறுவலை நன்கு மைய அரைக்கவும்.கேரட்டில் பாதியை நறுக்கியும்,மீதியை துருவியும் வைக்கவும்.

*புதினா,கொத்தமல்லியை நறுக்கவும்.நறுக்கிய  வெங்காயத்தில் பாதியும்,கொத்தமல்லியில் பாதியும் எண்ணெயில் பொன்முறுவலாக பொரித்தெடுக்கவும்.எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுக்கவும்.

*அரிசியை 1/2 மணிநேரம் , 1 கப் பால் மற்றும் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்இஞ்சி பூண்டு விழுதுபச்சை மிளகாய்தக்காளிநறுக்கிய,துருவிய கேரட் மற்றும் தக்காளி என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கிய பின் அரைத்த தேங்காய்உப்புதயிர் மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

*அனைத்தும் நன்கு சேர்ந்தாற்போல் வரும் போது  எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 கோப்பை அளவு குருமாவை தனியாக எடுத்து வைக்கவும்.

*மீதியுள்ள குருமாவில் அரிசியில் ஊறவைத்த பால்மற்றும் ண்ணீரை சேர்த்து ஊற்றி நன்கு கலக்கி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

*குருமா கொதிவரும் போது அரிசியை போட்டு  வேகவிடவும்.

*தண்ணீர் நன்கு வற்றி அரிசி 3/4 பதமாக  வெந்து வரும் போது பாதி அரிசியை எடுத்து தனியாக வைக்கவும்.

*மீதி சாதத்தில் பொரித்த மீன் துண்டுகள் மற்றும் தனியாக எடுத்துவைத்த குருமா மற்றும் பொரித்த வெங்காய மல்லித்தழை தூவி விடவும்.

*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை மற்றும் நெய் ஊற்றி விடவும்.

*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை மற்றும் நெய் ஊற்றி விடவும்.

*190°C  டிகிரிக்கு அவனை முற்சூடு செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

*பரிமாறும் போது சாதம் மற்றும் மீனை உடையாமல் கிளறி எடுத்து பரிமாறவும்.

பின் குறிப்பு:

*நான் பயன்படுத்தியிருப்பது வஞ்சீர மீன்.மீனை 2 முறை பொரிப்பதால் உடையாமல் இருக்கும்.

*இதற்க்கு அதிகம் முட்கள் இல்லாத மீனைதான் பயன்படுத்த வேண்டும்.வஞ்சீரம்மீன் (நெய் மீன்/அருக்குலா மீன்),கொடுவா மீன்,கடல் சால்மன் மீன்,காக்கை மீன்,விலை  மீன்,பெரிய தேங்காய் பாரை மீன் இவற்றை பயன்படுத்தலாம்.

*கேரட் சேர்ப்பதால் பிரியாணி சுவையாகவும்,கலராகவும்  இருக்கும்.

Related Videos