செட்டிநாடு மீன் வறுவல் | Chettinad Fish Fry

எப்போழுதும் வறுவல் செய்யும் போது சிறிது கடலைமாவு சேர்த்து வறுத்தால் கடாயில் ஒட்டாது.

 ஒரிஜினல் ரெசியில் எலுமிச்சை சாறுக்கு பதில் புளிதண்ணீர் சேர்த்து செய்துள்ளேன்.

 இந்த முறையில் மசாலா சேர்த்து வறுக்கும் போது மீன் வாடையும் வராது.

 மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

கிராம்பு- 4

பட்டை- 1 துண்டு

ஏலக்காய்- 3

மிளகு- 10

சீரகம் -1/2 டீஸ்பூன்

சோம்பு- 1/2 டீஸ்பூன்

ஜாதிக்காய்த்தூள்- 1/2 டீஸ்பூன்

அன்னாச்சிப்பூ -1

 தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த மீன் துண்டுகள்- 1 கிலோ

வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள் -2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்

இஞ்சி -சிறுதுண்டு

பூண்டுப்பல் -5

கறிவேப்பிலை- 1 கொத்து

புளிதண்ணீர் -2 டீஸ்பூன்

கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய்= தேவைக்கு

 செய்முறை விளக்கம்:

*மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*அதனுடன் வரமிளகாய்த்தூள்தனியாத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பொடிக்கவும்.

*கடைசியாக இஞ்சிபூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பல்ஸ் மோடில் 2 சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் மீன் துண்டுகள்உப்புமசாலா பொருட்கள் மற்றும் புளி தண்ணீர் சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் வைக்கவும்.

 *வறுப்பதற்கு முன் கடலைமாவு சேர்த்து பிசறி ,கடாயில் எண்ணெய் ஊற்றி மீனை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

 பின் குறிப்பு:

*இதே போல் வாழைக்காய்,சேனைக்கிழங்கும் வறுக்கலாம்.

 *அவரவர் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூளை சேர்க்கவும்,நான்  அதிகம் சேர்த்து செய்துள்ளேன்.

Related Videos