மலபார் மட்டன் பிரியாணி | malabar mutton biriyani

இந்த பிரியாணிக்கு அரிசியை வடிக்காமல் தம் முறையில் செய்வது, வெங்காயம்+முந்திரி திராட்சை இவற்றை வறுத்து சேர்ப்பது மற்றும் பிரியாணியை தம் செய்வது இதுதான் இதில் முக்கியமானது.

பரிமாறும் அளவு -  4 நபர்கள்

சமைக்கும் நேரம் -  > 1 மணிநேரம்

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

நறுக்கிய வெங்காயம்  - 3 பெரியது

தக்காளி -  2 பெரியது

நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித்தழை - தலா 1/2 கப்

கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாத்தூள் -1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா -1/2 டீஸ்பூன்

நெய் - 1/4 கப்

எண்ணெய் + உப்பு = தேவைக்கு

அலங்கரிக்க:

சிவற வறுத்த வெங்காயம் - 1

வறுத்த முந்திரி+திராட்சை - தேவைக்கு

சாதம் செய்ய

பாஸ்மதி -  3 கப்

முழு மிளகு -8

பிரியானி இலை -2

கிராம்பு -3

பட்டை - சிறு துண்டு

ஏலக்காய் -3

அரைக்க

இஞ்சி -  1 டேபிள்ஸ்பூன்

பூண்டுப்பல் - 10

பச்சை மிளகாய் -3

செய்முறை விளக்கம்:

*மட்டனில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் 1 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவைக்கவும்.

*பாத்திரத்தில்  4/12 கப் நீர் கொதிக்க வைத்து உப்பு, பிரியானி இலை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.

*1 கப் அரிசிக்கு 1/1/2 கப் நீர் சேர்க்கவும்.

*நீர் கொதிததும் கழுவிய அரிசியை சேர்த்து வேகவிடவும். அரிசி 3/4 பதம் வெந்து இருக்கும்.

*வெங்காயம், முந்திரி மற்றும் திராட்சை வறுத்து வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம்+தக்காளி மற்றும்  உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் கரம் மசாலா மற்றும் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*அனைத்தும் நன்கு வதக்கிய பின் தயிர் மற்றும் புதினா கொத்தமல்லி சேர்க்கவும்.

*இதனுடன் வேகவைத்த மட்டனை நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.கிரேவி கெட்டியாக வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*இதில் பாதி கிரேவியை தனியாக எடுத்து வைத்து அதில் பாதி சாதம், சிறிது வறுத்த வெங்காயம் , சிறிது முந்திரி திராட்சை, 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் , சிறிது கொத்தமல்லித்தழை மற்றும் சிறிது நெய் சேர்க்கவும்.

*இதே போல் இன்னொரு லேயர் போடவும்.

*தோசைக்கல்லை காயவைத்து அதன்மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறுதீயில் 20 நிமிடம் தம் போடவும்.

*பின் சாதத்தை உடையாமல் கிளறிவிட்டு  விரும்பிய ராய்த்தா+வறுவலுடன் பரிமாறவும்.

பின் குறிப்பு:

*இதில் நான் ரோஸ் வாட்டர் பதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.புதினா என்னிடம் இல்லாததால் கொத்தமல்லித்தழை மட்டும் 1 கட்டு சேர்த்து செய்தேன்.சுவையில் எந்த மாற்றமும் இல்லை.

Related Videos