புளியோதரை (புளி சாதம்) | Tamarind Rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 3கப்

புளி- 3எலுமிச்சை பழ அளவு(100கிராம்)

மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய்- தே.அளவு

நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன் 

தாளிக்க:

காய்ந்த மிளகாய்- 4

கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

வெ.உ.பருப்பு- 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்

கருவேப்பில்லை- சிறிது

வறுத்த வேர்க்கடலை- 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க வேண்டியவை:

தனியா- 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

கா.மிளகாய்- 3

கடலைப்பருப்பு- 1/2 டேபிள்ஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

வெந்தயம்- 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

* புளியை கெட்டியாக 1கப் அளவுக்கு கரைத்துக்கொள்ளவும்,மஞ்சள் தூள்+உப்பு சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை பொடித்து,புளி பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

*1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

பின்குறிப்பு:

இதற்கு தொட்டுக்கொள்ள இரால்,உருளைக்கிழங்கு ,கறி வருவல்,மசால் வடை,புதினா துவையல் நன்றாக இருக்கும்.

மீதமிருக்கும் பொடியை வறுவல்,வத்தக்குழம்புக்கு பயன்படுத்தலாம்.


Related Videos