நீர் தோசை | Neer Dosa

 நீர் தோசை மங்களூரில் மிக பிரபலமான காலை சிற்றுண்டி.அரைத்த உடனே சுட்டுவிடலாம்.காலையில் சுடுவதாக இருந்தால்  அரிசியை இரவே ஊறவைக்கவும்.
இதற்கு காரசட்னி/தேங்காய் சட்னி/ சிக்கன் குழம்பு ஏற்றது.

தேவையான பொருட்கள்:


பச்சரிசி -1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு- தேவைக்கு

செய்முறை விளக்கம்:


*அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் சேர்த்து மிக நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

 

 *இதற்கு மாவு நீர்க்க இருக்க வேண்டும்.அரைத்த மாவில் மேலும் 1 கப் நீர் ஊற்றி கரைக்கவும்.

 

 *இரும்பு தோசைகல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்த பின் மாவினை கல்லின் ஓரத்திலிருந்து ஊற்றி நடுவில் முடிக்கவும்.ரவா தோசைக்கு சுடுவது போல் மாவினை ஊற்றவும்.

 

 *மூடி போட்டு வேகவைக்கவும்.ஓரங்கள் வெந்து வரும் போது மடித்து எடுக்கவும்.

 

*காரமான சட்னியுடன் பரிமாறவும்.

பின் குறிப்பு:

*மாவு நன்கு நீர்க்க இருக்கவேண்டும்.

*ஒவ்வொரு முறையும் ஊற்றும் போது மாவினை நன்கு கலக்கி ஊற்றவும்.

*பச்சரிசி மட்டுமே உபயோகிக்கவும். நீர் தோசை மங்களூரில் மிக பிரபலமான காலை சிற்றுண்டி. அரைத்த உடனே சுட்டுவிடலாம்.


Related Videos