செட்டிநாடு சிக்கன் பிரியாணி | Chettinad Chicken Biryani

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி  -4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -2 பெரியது
தக்காளி- 2 பெரியது
நெய் -1/4 கப்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க:‌

காய்ந்த மிளகாய் -2
பச்சை மிளகாய்- 2
புதினா -1 கைப்பிடி
சின்ன வெங்காயம்- 12
பூண்டுப்பல்- 8
இஞ்சி-  சிறுதுண்டு
சோம்பு -1 டீஸ்பூன்
கிராம்பு- 2
ஏலக்காய் -3

சிக்கனில் ஊறவைக்க:

சிக்கன் 3/4 கிலோ
அரைத்த விழுது சிறிதளவு
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌:
பட்டை  -சிறுதுண்டு
கிராம்பு- 3
ஏலக்காய் -3
பிரிஞ்சி இலை- 3
கறிவேப்பிலை -2 கொத்து
சோம்பு -3/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அரிசியை கழுவி 10நிமிடங்கள் ஊறவைக்கவும்

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*அரிசியை சிறிது நெய்யில் 2 -3 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் அரைத்த விழுது என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி 5 1/2 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை சேர்த்து மூடி போட்டு சிறுதீயில் வேகவிடவும்.

*தண்ணீர் வற்றி சுண்டி வரும்போது தோசைகல்லை காயவைத்து அதன்மீது பிரியாணி பாத்திரதை வைத்து சிறுதீயில் 15 நிமிடங்கள் தம்மில் போடவும்.

*பிரியாணி வெந்ததும் மீதமுள்ள நெய்ய்யை ஊற்றி கிளறி கத்திரிக்காய் அல்லது ராய்த்தாவுடன் பரிமாறவும்.

Related Videos