வாத்துகறி குழம்பு | Duck Kuzhambu

வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது.அதனை தோலுடன் தான் சமைக்கனும்.அப்போதான் நல்லாயிருக்கும்.சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும். 

தேவையான பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ

நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2

நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2

கீறிய பச்சை மிளகாய் - 10

மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

முழுப்பூண்டு - 2

பிரியாணி இலை - 4

புளிக்கரைசல் - 2 கப்

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு + எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

*புளிகரைசலில் கறி, உரித்த முழுப்பூண்டுபற்கள் மற்றும்  மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைத்து,அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

*வடகம்+தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மிளகுத்தூள் என் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இந்த குழும்பு புளிப்பாக இருந்தால் தான் நன்றாகயிருக்கும்.அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.

Tag :vaathu kari kulambu seivathu eppadi |  vaathu kari benefits in tamil | vaathu kari seivathu eppadi |  duck gravy recipe | indian vaathu kari nanmaigal


Related Videos