தமிழ் பீலிங் கவிதை- Part 4

நீயுமா இப்படி

என்ற வார்த்தையில்

மிச்சமிருந்த ஒருதுளி

நம்பிக்கையும் உதிர்ந்துபோன

வலியிருக்கும்

----------------------------------------------------------------

மன காயங்கள்

ஆறியபோதும்

நினைவுக்கு

வரும்போதெல்லாம்

வலிகள் மட்டும் ஏனோ

புதிதாககே இருக்கின்றது

----------------------------------------------------------------

சில சமயம்

மீள முடியாதா

தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்

எனது பேச்சுக்கு

பிறர் இடம் இருந்து

மதிப்பு குறையும் போது

----------------------------------------------------------------

யாரை

பிரிந்த பின்

உன்னால் இயல்பாக

இருக்க முடியவில்லையோ

அவர்கள் தான்

உன் இதயம்

என்று புரிந்துக்கொள்

----------------------------------------------------------------

வார்த்தைகளில்

அன்பை செலுத்துங்கள்

அம்பு துளைப்பதை

போல பேசாதீர்கள்

அம்பை விட

வார்த்தைகளே வலிமையான

காயங்களை உண்டாக்கும்

----------------------------------------------------------------

காயங்கள் உருவாக

கத்திகள் தேவை இல்லை

புரிதலற்ற

வார்த்தைகளே போதும்

வலிக்க வலிக்க

நின்று கொல்லும்

----------------------------------------------------------------

சில சந்தர்ப்பங்களில்

இழப்பதற்கும்

தயராக இருங்கள்

எதுவும் எளிதில்

கிடைப்பதில்லை

----------------------------------------------------------------

அனைவரும்

அருகில் இருந்தும்

அனாதை போல்

உணர வைக்கின்றது

நாம் நேசித்தவரின் பிரிவு

----------------------------------------------------------------

புரிதல் இல்லையெனில்

பிரிதலே மேல்

அது எந்த

உறவாக இருந்தாலும்

தனிமை வேதனை

ஒரு நாள் மீள்வேன்

என்ற நம்பிக்கை

(மனதைரியம்)

----------------------------------------------------------------

தனிமையின் பிடி

ரண வேதனை

கற்றுக் கொடுத்தது

வாழ்க்கையின் மறுபக்கத்தை

----------------------------------------------------------------

மனம் தெளிந்த

நீரை போன்றது

முகவரி இல்லாத

ஒருவர் எறியும்

கல்லால் தான்

அது கலங்கிய

நீராக மாறிவிடுகிறது

Tag : tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal 

Related Videos