தமிழ் பீலிங் கவிதை- Part 3

பிரிவின் வலி

பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல

பிடித்தவர் அருகில்

இல்லாதவர்களுக்கும் தான்...

----------------------------------------------------------------

நினைவுகள்

என்னை

துரத்த...

சற்றும்

நிற்காமல்

ஓடிக்கொண்டே

நானும்

முடிவுறா பயணமாக

----------------------------------------------------------------

சில காயங்கள்

ஆறாதிருப்பதே நல்லது

மீண்டும்

காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...

----------------------------------------------------------------

எரித்து

கொண்டிருக்கும்

நினைவுகளை

அணைத்து

கொண்டிருக்கின்றேன்

மையில் வரிகளாக...

----------------------------------------------------------------

பேசி பயனில்லாத போது

மெளனம் சிறந்தது

பேசியே அர்த்தமில்லாத போது

பிரிவே சிறந்தது

----------------------------------------------------------------

பிறரிடம்

பகிர முடியாத

வேதனையைக் கூட

ஆற்றிட விழிகள்

உளற்றெடுக்கும்

அருவி தான் கண்ணீர்

----------------------------------------------------------------

நேசிப்பவர்கள்

எல்லாம் நம்மோடு

இருந்து விட்டால்

நினைவின் மொழியும்

பிரிவின் வலியும்

உணர முடியாமலே

போய்விடும்

----------------------------------------------------------------

பிரிந்து போவாய் என

தெரியும்

மறந்து போவாய் என்

தெரியாது

----------------------------------------------------------------

மலரும் நினைவுகளிலும்

சில வாடியேதான்

இருக்கின்றது

----------------------------------------------------------------

வானவில்லாய் நினைவுகள்

வந்து மறைந்தாலும்

வண்ணங்கள் மனதில்

பதிந்துவிடுகிறது.

Tag : tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal 

Related Videos