தமிழ் பீலிங் கவிதை- Part 2

உறக்கம் தொலைந்த இரவுகளில்

உறங்கிய நினைவுகள்

விழித்துக்கொ(ல்)ள்கிறது...

----------------------------------------------------------------

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்

விடாமல் துரத்துகின்றது மனம்...

----------------------------------------------------------------

சில ரணங்களை

மறக்க ஏதோவொன்றை

மனம் ரசிக்கதான்

வேண்டும்

----------------------------------------------------------------

கலைந்து போன

கனவிலும் வலியான நினைவுகள்

----------------------------------------------------------------

நிஜத்தின் வலியில்

கற்பனை எல்லாம்

இறந்து போனது

----------------------------------------------------------------

சில நேரங்களில் தனிமை கடினம்

சில நேரங்களில் தனிமை

தான் இனிமையான தருணம்...!

----------------------------------------------------------------

பசித்தவருக்கு தெரியும்

உணவின் அருமை...

இழந்தவருக்கு புரியும்

உறவின் அருமை....

----------------------------------------------------------------

சிரித்த நிமிடங்களை விட,

அழுத நிமிடங்களே...

என்றும் மனதை

விட்டு நீங்குவதில்லை....

(ஞாபகங்கள்)

----------------------------------------------------------------

சிலரது வாக்குறுதிகள்

தண்ணீரில் எழுதும்

எழுத்துக்களை போன்றதே....

----------------------------------------------------------------

புகைப்படத்திலும்

புன்னகைப்பதில்லை

புன்னகைப்பதே

மறந்துவிடுகிறது சிலருக்கு...

( விரக்தி )

Tag : tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal 

Related Videos