தமிழ் பீலிங் கவிதை- Part 1

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான் 

சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..

(கேட்டதில் வலித்தது)

----------------------------------------------------------------

நிஜத்தில் பாதி

கனவில் மீதி

என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...

----------------------------------------------------------------

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்

இதயங்கள் தா ( தூ) ங்காது

----------------------------------------------------------------

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

----------------------------------------------------------------

நம் உறவாக இல்லாத போதும்

அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

----------------------------------------------------------------

வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு

ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...

----------------------------------------------------------------

நினைவுகளும் சுமை

மனதுக்கு

தொல்லையாகும் போது

----------------------------------------------------------------

நேசித்தலை விட பிரிதலின் போது

உன் நினைவுகள் இரட்டை சுமை...

மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு

உன் இதயத்தை...

----------------------------------------------------------------

ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத

இழப்புகளிலும்

துயரத்திலும் விதிமேல்

பழிபோட்டு மனதை

தேற்றிக்கொள்வோம்

( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

----------------------------------------------------------------

கண்களில் மிதந்த

அழகிய காட்சியெல்லாம்

சில நேரங்களில் தூசியாகி

கண்ணீரை தருகிறது.

Tag : tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal 

Related Videos