காதலர் தின சிறப்பு கவிதைகள்-PART 8

திணறடிக்கும்

உன் அன்பில்

சிறையிருக்க வேண்டும்

ஆயுளின்

கடைசி நொடிவரை

ஆயுள் கைதியாய்

உன் இதயத்தில்

----------------------------------------------------------------

தேநீரில்

கரைந்த சக்கரையாய்

கலந்துவிட்டாய்

என்றும் திகட்டாத

தித்திப்பாய் மனதில்

----------------------------------------------------------------

சலிக்காமல்

காத்திருக்கும்

நிலவாக உனை

காண நான்

----------------------------------------------------------------

என் கவிதைகளின்

தலைப்பு நீ

உன் கவிதைகளின்

வரிகள் நான்

----------------------------------------------------------------

நான் என்றோ

தொலைந்தேன்

உன்னுள்

உனக்குள் நான்

----------------------------------------------------------------

அளவில்லாத

உன் அன்பு வேண்டும்

என் ஆயுள் முழுவதும்

----------------------------------------------------------------

கருங்கூந்தலை கலைத்திடும்

தென்றல் காற்றும்

உன் ஸ்பரிசத்தையே

நினைவூட்டி செல்கிறது

----------------------------------------------------------------

மறக்க நினைக்குறேன்

இருந்தும்

மறக்காமல் நினைக்கிறேன்

----------------------------------------------------------------

எல்லோருக்கும் அழகை வர்ணிக்க

தானே கவிதை தேவைப்படும்

எனக்கு மட்டும் கவிதையை

வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்

----------------------------------------------------------------

நின்று திரும்பிப்பார்க்க

விடவில்லை நாணம்

நீ நிழலாய்

பின்தொடர்கிறாய்

என தெரிந்தபின்பும்

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos