காதலர் தின சிறப்பு கவிதைகள்-PART 6

தொலைத்த

புன்னகையெனும்

முகவரியை

என்னவன்

தேடி கொடுத்தான்

----------------------------------------------------------------

காற்றலையில்

கலந்து வந்த

உன் குரல்

இதயத்தை

நனைக்க

மனமும் பூத்தது

பூஞ்சோலையாய்

----------------------------------------------------------------

காதல்

கணவா

களைத்திருக்கும்

உன் கண்களுக்கும்

ஓய்வுகொடு

கனவில் சந்திப்போம்

----------------------------------------------------------------

இந்த நொடி

நீளாதா

என்று மனதை

தவிக்கவிடுகிறாய்

சுகமாய்

----------------------------------------------------------------

மலரும்

நினைவுகள்

மனதை தாலாட்ட

உறங்கிப்போனது

விழிகள்

----------------------------------------------------------------

ஏதோ

ஒரு நினைவு

விழிகளை

நனைக்கும்

போதெல்லாம்

புன்னகையுடனேயே

கடந்துவிடுகின்றேன்

அந்நொடியை

----------------------------------------------------------------

பிடித்த

தனிமையும்

கொடுமையானது

உன்னுள்

தொலைந்ததிலிருந்து

----------------------------------------------------------------

யாரிடமும்

ஆறுதலை

எதிர்பார்க்காத

மனம்

உன் தோளை

மட்டுமே தேடுது

சாய்ந்து கொள்ள

----------------------------------------------------------------

நினைவும்

ஒரு அழகிய

இசை

அது நீயென்பதால்

----------------------------------------------------------------

விழி

மொழி புரிந்தும்

மௌனத்தை

பரிசளித்து

நீயே

என் விடையாகிப்போனாய்

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos