காதலர் தின சிறப்பு கவிதைகள்-PART 5

உன்னால்

தண்டனை

அனுபவிக்கின்றது

நகமும் கொஞ்சம்

திருப்பிக்கொள்

உன் பார்வையை

----------------------------------------------------------------

தனித்திருக்கும்

போதெல்லாம்

மனம் உன்னிடமே

தாவுது...

----------------------------------------------------------------

மறைத்துக்கொள்

நெஞ்சத்தை

எனக்கு சொந்தமான

இதயத்தை

தீண்ட காற்றுக்கும்

அனுமதியில்லை

----------------------------------------------------------------

விழிகளுனை

கண்டுவிட்டால்

மனமும்

ஏனோ பறக்கின்றதே

சிறகடித்து

வண்ணத்துப்பூச்சியாய்

----------------------------------------------------------------

கூந்தலை பிடித்திழுத்து

விளையாடி ஜிமிக்கியும்

உன்னை அடிக்கடி

ஞாபகபடுத்துது

----------------------------------------------------------------

தாயை காண

காத்திருக்கும்

குழந்தையாய்

உன் வழி

நோக்கி

என் விழிகளும்

காத்திருக்கு

----------------------------------------------------------------

அகிலமும் அசைவற்று

போனது

ஒற்றை நொடியில்

நெற்றி முத்தத்தில்

நான் எனை

மறந்தபோது

----------------------------------------------------------------

பொழியும்

மழையைவிட

உன் பார்வையின்

சாரலே

என்னை நனைத்து

செல்கிறது

----------------------------------------------------------------

சிந்தும்

நீரை சிறைபிடிக்க

சிக்கி கொண்டது

உன் நினைவு

----------------------------------------------------------------

கனவு

கலைந்த பின்னும்

விழிகள்

மூடிக்கிடக்கின்றேன்

உன் பிம்பம்

கலைந்திட

கூடாதென

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos