காதலர் தின சிறப்பு கவிதைகள்-PART 4

அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா

அப்பாவை விட்டுகொடுக்காத அம்மா

இவர்களைவிடவா சிறந்த காதல்ஜோடி

இவ்வுலகிலிருக்க போகிறார்கள்

----------------------------------------------------------------

சத்தமின்றி

யுத்தம் செய்யும்

உன் பார்வையில்

ரத்தமின்றி

போர்க்களமானது

மனம்...!

----------------------------------------------------------------

ஒட்டி

கொண்டிருக்கும்

தாடிக்குள்

சிக்கி கொள்கிறது

மனம் தினம்

----------------------------------------------------------------

உறங்காத

விழிகளுக்குள்

மறைந்துகொண்டு

இம்சிக்கிறாய்

இதமாய்

----------------------------------------------------------------

துன்பக் கடலில்

தத்தளித்தபோது

அலைபோல்

வந்தென்னை

கரைசேர்த்தாய்

----------------------------------------------------------------

சுட்டெரிக்கும்

வெயிலிலும்

மழைசாரலாய்

நீயென்னை

கடக்கயில்

இதயமும்

நனையுதே

----------------------------------------------------------------

என்

ஒவ்வொரு

நொடியின்

தொடக்க

புள்ளி நீ

----------------------------------------------------------------

ஜன்னலை

பூட்டியபின்னும்

காட்சியை

ரசிக்க தவறாத

விழிகளைபோல்

மனதை பூட்டியபின்னும்

உன் நினைவுகளை

நினைக்க தவறியதில்லை

மனம்...

----------------------------------------------------------------

செல்லும்

இடமெல்லாம்

வந்து விடுகின்றாய்

நிலவைபோல்

நீயும் நினைவில்

----------------------------------------------------------------

உதிரா மலராய்

நீ மனதில்

மலர்ந்திருக்க

இந்த உதிரும்

மலரும் ஏனோ

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos