காதலர் தின சிறப்பு கவிதைகள்-PART 3

வரிகளில்

இல்லாத ரசனை

உன்னிரு விழிகளில்

உணர்ந்தேன்...!

----------------------------------------------------------------

நீ விடைபெறும்

போதெல்லாம்

என்னிடம் தாவிக்கொள்கின்றது

சிறு குழந்தையாய்

உன் நினைவுகள்...!

----------------------------------------------------------------

சுதந்திரமான மனதும்

சுயநலமாகி போனது

உனதன்பு எனக்கே

எனக்குமட்டும்

சொந்தமென்று

----------------------------------------------------------------

மாட்டிய கொலுசில்

மனசையும் கோர்த்து

விட்டாயா

ஒலிக்குமிசையில்

உன்பெயர் கேட்குதே

----------------------------------------------------------------

உறங்காத கண்களும்

உறங்கிப்போனது

உன் நெஞ்சமெனும்

பஞ்சணையில்

----------------------------------------------------------------

உளிகொண்டு

பார்வையில்

செதுக்குகின்றாய்

சிலையாகின்றேன்

நானும்

----------------------------------------------------------------

காதலின்

வெளிபாடுதான்

முத்தமென்றால்

நாமும் பரிமாறிக்கொள்வோம்

முத்தங்களை

விழிகளை இதழ்களாக்கி

----------------------------------------------------------------

கண்களில் தொடங்கி

கட்டிலறையில்

முடிவதல்ல காதல்

மனதில் மலர்ந்து

மணவறை சென்று

மரணம்வரை

உடனிருப்பதே

உண்மை காதல்

----------------------------------------------------------------

உன்னில் நானும்

என்னுள் நீயுமாக

வாழும் நமக்கு

தினமும் காதலர் தினமே

----------------------------------------------------------------

எந்த தினம்

என்றாலும் அனுதினமும்

அவனுடன் இருந்தால்

காதலர்தினம் தான்...!

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos