காதலர் தின சிறப்பு கவிதைகள்-PART 2

இடைவெளி

வலியை தருமென

தெரிந்தும் பிடிவாதமாய்

அனுபவித்திருக்கிறோம்

இருவரும்...!

----------------------------------------------------------------

விடைப்பெறட்டும்

நாணம்

விடைத்தருகிறேன்

நானும்

உன் பார்வையின்

கேள்விக்கு

----------------------------------------------------------------

உலகை

காட்டியது

பெற்றோரென்றாலும்

அதை ரசிக்க

வைத்துக்கொண்டிருப்பது

நீ...!

----------------------------------------------------------------

உன் சிறுத்துளி

நினைவு போதுமென்

அகம் முகம் மகிழ...!

----------------------------------------------------------------

உதிர்ந்திடுமுன்

கொய்தெறிந்துவிட்ட

மலருக்காக

கண்ணீர் வடிக்கின்றது

வானம்...!

----------------------------------------------------------------

தூரம் வலியை

கொடுத்தாலும் சுகமே

நினைவுகள்

உன்னை சுற்றியே

சுழன்று கொண்டிருப்பதால்

----------------------------------------------------------------

நினைவு கடலில்

நீந்துகின்றேன்

கரை சேர்த்திட

வருவாயென...!

----------------------------------------------------------------

நம்மை

நனைத்த மழைதுளி

உலர்ந்தபோதும்

நாம் இணைந்த

நினைவுதுளி

இன்னும் ஈரமாகவே

மனதில்...!

----------------------------------------------------------------

என்னால்

நீ அனுபவித்த

காயங்களையெல்லாம்

ஆற்றிடவேண்டும்

அன்பில்...!

----------------------------------------------------------------

தித்திக்கும்

உன் நினைவுகளை

சந்திக்கும் போதுதான்

காத்திருக்கும் வலிகள் கூட

காணாமல் போய் விடுகின்றது

என் கனவுகள்

நீயாக இருக்கும் வரை

என் கவிதைகள்

உன் பெயர் சொல்லும்

அது விதியின் செயல் அல்ல

நீ செய்த மாய வலை...!

(யாவும் கற்பனை)

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos