காதலர் தின சிறப்பு கவிதைகள் -Part 1

வம்பான

பார்வையை

அம்பாக

எய்கின்றாய்

----------------------------------------------------------------

நீ தூரமாக இருந்தாலும்

உனது குரலை

கேட்காத நொடிகள் இல்லை

கேட்கிறேன் இதய துடிப்பில்

ஏனென்றால் என் இதயம்

துடிப்பது உனக்காக அல்லவா

----------------------------------------------------------------

மனமும்

மகிழ்வில்

உன் விழிகளில்

என்னை காண்பதால்

----------------------------------------------------------------

என்னை மறந்து

கொஞ்ச நேரம்

உலகை ரசிக்க

நினைத்தால்

அங்கும் வந்துவிடுகிறாய்

நானே...

உன் உலகமென்று

----------------------------------------------------------------

கொஞ்சும்

மொழியில்

கெஞ்சும்

உன் வார்த்தைகளில்

என் கோபங்களும்

மறைந்து விடுகிறது

----------------------------------------------------------------

மழைச்சாரலாய்

நீவர கவிச்சோலையானேன்

நான்...!

----------------------------------------------------------------

மனதிலிருக்கும்

ஆசைகளையெல்லாம்

கொட்டி தீர்த்தவன்

அயர்ந்து போனான்

குழந்தையாய்...!

----------------------------------------------------------------

காற்றோடு

பேசும் மலராய்

உன் மனதோடு

பேசி கொண்டிருக்கின்றேன்

நான்...!

----------------------------------------------------------------

நான்

மறைந்தாலும்

உன் மனதில்

மறக்கப்படாதளவுக்கோர்

அழகிய வாழ்க்கையை

வாழ்ந்திட வேண்டும்

----------------------------------------------------------------

பார்க்க

மறுத்த விழிகளும்

காத்துக்கிடக்கு உன்னன்பில்

தொலைந்து...!

Tag : காதலர் தின சிறப்பு கவிதைகள் | Here are the Latest Collections of kadhalar thina kavidhaikal in Tamil Language| Tamil SMS Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font|| Tamil kavithai and Love Quotes | 

Related Videos