அன்பு கவிதைகள் Part 6

கொடுக்கின்ற அன்பு

தான் திரும்ப கிடைக்கும்

பெறுகின்ற அன்பு தான்

இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது

----------------------------------------------------------------

பேராசை முடிகின்ற இடத்தில்

மகிழ்ச்சி தொடங்குகிறது

புன்னகை தொடங்கும் இடத்தில்

வாழ்க்கை தொடர்கிறது

அன்பு இருக்கும் இடத்தில்

அனைத்தும் கிடைக்கிறது

----------------------------------------------------------------

உலகில் நிலையானது

பணமோ பொருளோ

அல்ல

நம்பிக்கை நிறைந்த

அன்பு மட்டுமே

----------------------------------------------------------------

அன்பு எப்படிபட்டது என்று

தள்ளிப்போகும் போது தான்

புரியத் தொடங்கும்

----------------------------------------------------------------

உருவமில்லாத ஒன்று

உலகையே ஆளுகிறது

என்றால்

அது ஒருவர் மீது வைக்கும்

உண்மையான

அன்பாக தான்

இருக்க முடியும்

----------------------------------------------------------------

அன்பெனும் பிடிக்குள்

அகிலமே அகப்படும்

ஆயுள்கைதியாய்

விடுதலைபெற

விருப்பமேயின்றி

நீ மட்டும்

விதிவிலக்கா என்ன

----------------------------------------------------------------

புரிதல் என்பது

அன்பானவர்களின்

புன்னகையையும் மனதையும்

அறிவதிலும் தான் உள்ளது

----------------------------------------------------------------

உண்மையான

அன்பு என்பது

வார்த்தைகளால்

விவரிக்க இயலாதது

அது உணர்ச்சிகளாலும்

எண்ணங்களாலும்

செயலாலும் உணர்த்தப்படுவது

----------------------------------------------------------------

அகிலம் முழுவதும்

அனைவரின் தேடலும்

அன்னைக்கு நிகரான அன்பு

செலுத்துபவரை மட்டுமே

----------------------------------------------------------------

பெரும் துயரத்தையும்

கடத்தி விடும் சிறு பாலம்

நம்மீது அன்பு

கொண்டவர்களின் புன்னகை

Tag : Latest Collections of தமிழ் அன்பு கவிதை | Tamil Anbu Kavithai | அன்பு கவிதைகள் | அன்பு kavithai | Anbu Kavithaigal | Tamil Kavithaigal |அன்பு கவிதை வரிகள் | அன்பு கவிதை தமிழ்

Related Videos