அன்பு கவிதைகள் Part 5

அன்பு என்பது

ஒரு அழகிய உணர்வு

அதை அலட்சியபடுத்துபவர்களிடம்

காட்டி வீணடிக்காதீர்கள்

அழகாய் கொண்டாடி

தீர்ப்பவர்களிடம் காட்டுங்கள்

----------------------------------------------------------------

சிலரின்

உண்மையான அன்பால்

தவறுகள் கூட

மன்னிக்கப்படுகிறது

----------------------------------------------------------------

சொற்களில் முரண்பாடு

ஏற்பட்டாலும்

உன் மேல்

நான் கொண்ட

அன்பு மட்டும் மாறாது

----------------------------------------------------------------

கொடுப்பதிலும்

பெறுவதிலும்

கஞ்சத்தனம் வேண்டாமே

(அன்பு)

----------------------------------------------------------------

உலகில் எதிர்பார்பில்லாத

அன்பு கிடைப்பது வரம்

அதை உன்னிடம் கண்டேனே

----------------------------------------------------------------

அன்பால்

அழகு செய்

எவர் தடுத்தாலும்

மறையாது பேரன்பு

----------------------------------------------------------------

அன்பு ஒருபோதும்

அனாதையில்லை

எங்கோ எவரோ

யாரோ யாருக்கோ

எதையும் எதிர்பார்க்காமல்

அள்ளி கொடுத்துக்கொண்டுதான்

இருக்கின்றார்கள்

அளவில்லா அன்பை

----------------------------------------------------------------

அதிகமான அன்பு வச்சா

அன்பானவர்களுக்கு

தொல்ல கொடுக்க தான்

தோணுது

----------------------------------------------------------------

எல்லோர் இதயமும்

மென்மையானது தான்

அன்பால் கடினமானவர்களை

கூட மாற்ற முடியும்

அவர்களை அணுகும் வழி

தெரிந்தால்

----------------------------------------------------------------

பழகிய இருவரை

அன்பால் இணைத்தால்

அது அன்பின் வெற்றி

ஆக முடியாது

இருவரும் மனதால்

புரிந்து இறுதி வரை இணைந்து

அந்த உறவை தக்க வைத்துக்கொள்ளவதே

அன்பின் வெற்றியாகும்

  Latest Collections of தமிழ் அன்பு கவிதை | Tamil Anbu Kavithai | அன்பு கவிதைகள் | அன்பு kavithai | Anbu Kavithaigal | Tamil Kavithaigal |அன்பு கவிதை வரிகள் | அன்பு கவிதை தமிழ்

Related Videos