அம்மா கவிதை-Part 2

எதுவும்

அறியா புரியா வயதில்

எந்த சுமைகளும்

கவலைகளுமின்றி

அன்னையின் கரங்களில்

தவழும் காலம் சொர்க்கமே

----------------------------------------------------------------

உயிருக்குள் அடைக்காத்து

உதிரத்தை பாலாக்கி

பாசத்தில் தாலாட்டி

பல இரவுகள்

தூக்கத்தை தொலைத்து

நமக்காகவே

வாழும் அன்பு

தெய்வம் அன்னை

----------------------------------------------------------------

கடல் நீரை

கடன் வாங்கி

கண்கொண்டு அழுதாலும்

நான் சொல்லும்

நன்றிக்கு போதாதம்மா

அன்னையர் தின வாழ்த்துக்கள்

----------------------------------------------------------------

ஒவ்வொரு நாளும்

கவலை படுவாள்

ஆனால் ஒரு நாளும்

தன்னை பற்றி

கவலை பட மாட்டாள்

(அம்மா)

----------------------------------------------------------------

ஆழ்ந்த உறக்கத்தின்

அஸ்திவாரம்

அம்மாவின் தாலாட்டு

----------------------------------------------------------------

ஆயிரம் உணவுகள்

வித விதமாக சாப்பிட்டாலும்

அன்னை சமைத்த

உணவுக்கு ஈடாகாது

----------------------------------------------------------------

உலகின் நிகழ்வுகளையும்

அழகினையும் எடுத்து

கூறும் முதல்

குருவாக இருப்பவர்

அம்மா மட்டுமே

Tag : Here are the Latest Collections of Tamil Amma Kavithai and Quotes. |அன்னையர் தினா நல்வாழ்த்துக்கள் |அம்மா கவிதை | Amma kavithai Facebook | Amma Kavithai SMS | Amma Kavithai in Tamil | Mothers day kavithai in tamil | அம்மா கவிதைகள் | அன்னையர் தினம் கவிதைகள் 2019

Related Videos