அம்மா கவிதை-Part 1

காலம் முழுவதும்

உன்னை வயிற்றிலும்

மடியிலும் தோளிலும்

மார்பிலும் சுமப்பவள்

தாய்மட்டுமே...!

அவளை என்றும்

மனதில் சுமப்போம்...

----------------------------------------------------------------

ஆயிரம் விடுமுறை

வந்தாலும் அவள்

அலுவலகத்திற்கு மட்டும்

விடுமுறையில்லை

அம்மா சமயலறை...

----------------------------------------------------------------

இன்பம் துன்பம்

எது வந்த போதிலும்

தன் அருகில்

வைத்து அனைத்து

கொள்கிறது தாய்மை

----------------------------------------------------------------

வயது

வித்தியாசம்

பார்ப்பதில்லை....

அம்மாவின்

கொஞ்சலில்

மட்டும்....

இன்னும் குழந்தையாக....

----------------------------------------------------------------

அம்மாவின் கைக்குள்

இருந்த வரை

உலகம் அழகாகத்தான்

தெரிந்தது...!

----------------------------------------------------------------

வலி நிறைந்தது

என்பதற்காக

யாரும் விட்டுவிடுவதில்லை

தாய்மை ❤

----------------------------------------------------------------

அன்புகலந்த

அக்கறையோடு சமைப்பதால்

தான் எப்போதும்

அம்மாவின் சமையலில்

சுவை அதிகம்...!

----------------------------------------------------------------

நான் முதல்முறை

பார்த்த அழகிய

பெண்ணின் முக தரிசனம்

அம்மா...!

----------------------------------------------------------------

இன்று என்னை

இவ்வுலகுக்கு

அறிமுகம் செய்த

என் அன்பு அம்மாவுக்கு

ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்

----------------------------------------------------------------

நான் உன்னுடன்

இருக்கும் பொழுது

என் பிரச்சனை

எப்போதும் மறந்து

விடுகிறேன் செல்லமே

(அம்மா)

Tag : Here are the Latest Collections of Tamil Amma Kavithai and Quotes. |அன்னையர் தினா நல்வாழ்த்துக்கள் |அம்மா கவிதை | Amma kavithai Facebook | Amma Kavithai SMS | Amma Kavithai in Tamil | Mothers day kavithai in tamil | அம்மா கவிதைகள் | அன்னையர் தினம் கவிதைகள் 2019

Related Videos