காதல் கவிதைகள்-Part 9

இருளை பூசிக்கொள்ளும்

இரவாய்

மனதை சூழ்ந்து

கொ(ல்)ள்கிறாய் நீ

----------------------------------------------------------------

ஏதேதோ எண்ணங்கள்

நெஞ்சில் அலையாய்

எதுவும் விளங்காமல்

புன்னகைக்கிறேன்

வழிமாறும் பயணங்களில்

விழிமாறும் நிமிடங்கள்

----------------------------------------------------------------

நீயின்றி

நகர்ந்ததுண்டு

நாட்கள்

உன் நினைவின்றி

நகர்ந்ததில்லை

என் நாட்கள்

----------------------------------------------------------------

வானில்

நிலவில்லாத நாட்கள்

கூட உண்டு

என்னுள்

நின் நினைவில்லாத

நாட்கள் என்பதே இராது

----------------------------------------------------------------

உறங்கி கிடக்கும்

கண்களுக்குள்

கிறங்கி கிடக்கு

உன் நினைவு

உறங்காமல்

----------------------------------------------------------------

எனை தனிமைபடுத்த

கூடாதென நினைக்கும்

ஒரே ஜீவன்

உன் நினைவுதான்

நீயில்லாதபோது

ஓடோடி வந்து

விடுகிறது

----------------------------------------------------------------

கண்ணால் பேசியே

கற்று கொடுத்தாய்

என் கண்களுக்கும்

காதலிக்க

----------------------------------------------------------------

எட்டா தூரத்தில்

நீயென்றாலும்

உனை எட்டி

விடுகிறேன்

கற்பனையில்

உன்னருகில்

----------------------------------------------------------------

உன் காதலில் கரைகிறேன்

உன் சிரிப்பில் சிதைகிறேன்

உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்

மொத்தத்தில்

உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்

----------------------------------------------------------------

உன் பார்வை

எனை தீண்டாதெனில்

என்னுள்ளமும்

ஒளியிழந்த விளக்கே

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos