காதல் கவிதைகள்-Part 7

இதயங்கள்

தனித்தனி என்றாலும்

உன் சுவாசம்

தீண்டவில்லையெனின்

என் மூச்சும் இல்லை

----------------------------------------------------------------

உள்ளங்கையில்

வெப்பம் ஏற்றுகிறாய்

மெல்ல குளிருது

உள்ளமும்

----------------------------------------------------------------

கைகளில்

கனஏட்டை தாங்கியிருந்தாலும்

என் மன ஏடு

ஏந்தியிருப்பது உனையே

----------------------------------------------------------------

வெள்ளை காகிதத்தில்

வெறுமையாய்

கிறுக்கி கொண்டிருந்த

எனையும் ரசனையாய்

எழுத வைத்தது நீ

என்மீது கொண்ட

காதல்

----------------------------------------------------------------

இமைகள் கொண்டு

சிறை பிடித்து

விட்டேன் உனை

கனவு கலைந்தாலும்

நீ கண்களிலிருந்து

தப்பிவிடாதிருக்க

----------------------------------------------------------------

எட்டிப்போக

எத்தனித்தாலும்

எனை கட்டிப்போடுகிறது

உன் கரங்களின்பிடி

----------------------------------------------------------------

துளையில்லா

மூங்கில் மரங்களிலும்

புல்லாங்குழலின் இசை

உன் நினைவுகள் தீண்ட

----------------------------------------------------------------

ஒருவரில் ஒருவர்

நாம் தொலைந்த

இந்நிமிடங்கள்

தொடர்ந்திட வேண்டும்

தொலையாமல்

----------------------------------------------------------------

சொல்லாத காதலாய்

மனம் கொல்லாமல்

கொல்லுது

நீ இல்லாத போது

ஏதேதோ

சொல்ல நினைத்து உன்னிடம்

----------------------------------------------------------------

சத்தமின்றி நடந்தாலும்

நித்தம் இம்சிக்கின்றதே

மாட்டி சென்றாயா

மனதை கொலுசில்

உனையே நினைத்திருக்க

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos