காதல் கவிதைகள்-Part 6

பக்கம் பக்கமாய்

வர்ணிக்கின்றான்

உன் வெட்கமும்

அழகிய கவிதைத்தான்

என்று

----------------------------------------------------------------

தூரத்தில் நீயிருந்தால்

துயரத்தில் துடிக்குது

மனம்

----------------------------------------------------------------

கடவுளையும்

மிஞ்சி விடுகிறாய்

காத்திருக்க வைத்து

காட்சி தராமலேயே

கடத்துவதில்

----------------------------------------------------------------

வானத்தில் மட்டுமின்றி

எந்தன் கவியிலும்

நித்தமும் ஒளி வீசும்

ஒற்றை பேரழகி அவள்

----------------------------------------------------------------

உனக்கென்ன நிமிடத்தில்

வந்துவிடுவேன்

என்கின்றாய்

எனக்கல்லவோ

நகர்கிறது

யுகமாய் நொடியும்

----------------------------------------------------------------

எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தும்

உன்னிடமே மயங்குகிறேன்

மாயம் செய்ததென்னவோ

----------------------------------------------------------------

உன்

துடிக்கும் இதயமும்

தவிக்கும் நினைப்பும்

எனக்காகவே

இருக்க வேண்டும்

----------------------------------------------------------------

யாரோடும்

பயணிக்க பிடிக்கவில்லை

நம் நினைவோடு

பயணிக்க பிடித்திருப்பதால்

----------------------------------------------------------------

இரக்கமற்ற

இரவு நீள்கிறது

நீயில்லா நாட்களில்

என் உறக்கத்தையும்

பறித்து

----------------------------------------------------------------

நெற்றியில் பொட்டிட்டு

கொள்ளும் போதெல்லாம்

உன் இதழிட்ட

திலகம்

பௌர்ணமியாய்

ஒளிர்கிறது மனதில்

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos