காதல் கவிதைகள்-Part 3

இவ்வுலகில் எனக்காக

ஒரு அழகிய

கனவை தந்தது

உன் அன்பு

----------------------------------------------------------------

மழைத்துளி எண்ணிக்கையிலும்

அலை கரை மோதும்

எண்ணிக்கையிலும்

என் இதயத்துடிப்பின்

எண்ணிக்கையிலும்.

உன்னிடம் காதல் சொன்னேன்

----------------------------------------------------------------

நீரலையாய் தளும்பும்

உன் நினைவலைக்கு

சுதி சேர்கிறது

கொலுசொலியும்

----------------------------------------------------------------

மொட்டில்லா

மெட்டியிலும் மெல்லிசை

உன் கரம்

பட்டதால்

----------------------------------------------------------------

புரியாத போதும்

ரசிக்க தூண்டும்

கவிதையாய் தூண்டுகிறாய்

மனதை

பார்வையில் பேசி

----------------------------------------------------------------

காலமும்

கண்ணாமூச்சி

விளையாடுகிறது

தூரத்தில்

உன்னை வைத்து

என் மனதோடு

----------------------------------------------------------------

மரணமும் வரமே

உன் தோளில்

சாய்ந்திருக்க

எனை தழுவிக்கொண்டால்

----------------------------------------------------------------

விரல்கள் வீணையில்

விளையாடினாலும்

என்னிதய வீணை

மீட்டுவது

உனை தான்

----------------------------------------------------------------

சுமக்கின்றேன் என்று

அதிக வலிகளை

கொடுக்காதே

உடைந்திடும் என்னிதயம்

----------------------------------------------------------------

குளிர் வாடையாய்

உன் பார்வை வீச

போர்த்தி கொள்கிறது

வார்த்தைகளும் மௌனமாய்

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos