காதல் கவிதைகள்-Part 1

மனம் மறைத்தாலும்

கண் காட்டி

கொடுத்து விடுகிறது

உன் மீதுள்ள

காதலை

----------------------------------------------------------------

நினைவை தூதனுப்பி

உன் உலகுக்குள்

அழைத்து

வந்து விடுகிறாய்

----------------------------------------------------------------

தேன் பருக

மலரை சுற்றி வரும்

வண்ணத்துப் பூச்சி போல

உன் காதல் தேடி

உன்னையே வட்டமிடும்

காதல் பூச்சி நான்

----------------------------------------------------------------

காரணம் கேட்காமலேயே

கண்ணீரின் வலியை

உணர்ந்து கொள்ளும்

துணை கிடைப்பது

வரம்

----------------------------------------------------------------

கண்ணனுக்காக

காத்திருக்கும்

ராதையாய்

உனக்காக நான்

உனைக்காண

----------------------------------------------------------------

காதுக்குள் ரீங்காரமிடும்

உன் குரலொலி

கேட்டு கம்மலும்

தலை கவிழ்ததோ

நாணத்தில்

----------------------------------------------------------------

மனதின்

வெறுமையையும்

நிறைத்து விடுகிறாய்

நினைவில்

----------------------------------------------------------------

கண்களோடு நீ

கலந்ததிலிருந்து

காத்திருப்பும்

கடினம் தான்

----------------------------------------------------------------

மல்லிகைக்குள் மறைந்திருந்து

மயக்கும் வாசனையாய்

மனதில் ஒளிந்திருந்து

மயக்குகிறாய் எனை

----------------------------------------------------------------

எழுதிடுவோம்

ஒரு புதுக்கவிதை

விழிகளில் கலந்து

இதயத்தில் நுழைந்து

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos