அதிசய பனிலிங்கம்

 சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதேஇ அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும்இ பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் பனிலிங்க சிவ ஆலயத்தை பற்றி பார்ப்போம்.....! 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே அமைந்திருக்கும் அமர்நாத் குகை சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள இந்த குகை 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

இங்கு உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை இங்கு பனிலிங்கம் உருவாவது விசேஷம். அதுமட்டுமல்லாமல் மே முதல் செப்டம்பர் வரையிலான காலங்களிலும் இந்த லிங்கத்தை காண இயலும். 

இந்த குகை 60 அடி நீளமும்இ 15 அடி உயரமும்இ 30 அடி அகலமும் கொண்டது. இங்கு காணப்படும் பனிக்கட்டியாலான சிவலிங்கம் இயற்கையாக உருவானதாக நம்பப்படுகிறது.

Related Videos