கனவில் கண்ட பேயால் தூக்கில் தொங்கிய போலீஸ்காரர் ...!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். கடலூர் ஆயுதப்படை பிரிவில் முதல்நிலை  காவலராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி 2குழந்தைகள் உள்ளனர். இவர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தன் மனைவி விஷ்ணுப்பிரியா-வையும், குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். விழா முடிந்து விஷ்ணுப்பிரியா வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்துள்ளார் அப்போது தன் கணவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த விஷ்ணுப்பிரியா கதிகலங்கி போய் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை கூறியுள்ளனர்.


இந்த செய்தியை அறிந்த கடலூர் புதுநகர் போலிஸார் பிரபாகரன் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பிரபாகரனுக்கு சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அதற்காக  மருத்துவமனையில்  சிகிச்சை செய்தும் குணமாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தன் கனவில் தீயில் எறிந்த பெண் ஒருவர் கருகருவென கோரமான முகத்துடன் தன் கழுத்தை நெறித்து கொல்ல வருவதாகவும், தன்னை போட்டு அமுக்குவதாகவும் பிரபாகரன் கூறிவந்துள்ளார்.

இப்படிப்பட்ட கனவால் தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று ஆழமாக நம்பிய பிரபாகரன் குறி சொல்பவர்களை சந்தித்து மந்திரித்து உள்ளார். முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றும் மந்திரித்து தாயத்து கயிரையும் காட்டியுள்ளார்.


பேய் பீதியில் வெளியே செல்ல பயந்த பிரபாகரன் மருத்தவ விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டின் பூஜை அறையிலேயே இருந்துள்ளார். ஓரளவு பயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். ஆனால் பணிக்கு சென்ற முதல் நாளே மீண்டும் தன் கனவில் அந்த பேய் வந்து பயமுறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் பயமடைந்த பிரபாகரன் கனவில் வந்த பெண்ணுக்கு அஞ்சி தூக்கில் தொங்கி இறந்துள்ளார்.


இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபாகரன் பணிசுமையின் காரணமாகவோ, அதிகாரிகளுக்கு அஞ்சியோ இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும், முப்பொழுதும் இருட்டை கண்டு பயந்து வந்த பிரபாகரன் பேய் பயத்தினால் தான் இறந்திருப்பார் என்று சக போலீசார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் வசித்து வந்த காவலர் குடியிருப்பில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் தீக்குளித்து இறந்த அந்த பெண் தன் கனவில் வந்து எனக்கு உயிர் பயத்தை காட்டிவிட்டார் என்று சக போலீசாருடன் புலம்பியதாகவும் கூறுகின்றனர். பேய்க்கு பயந்து தூக்கில் தொங்கிய இந்த சம்பவம் பிரபாகரன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் காவலர் குடியிருப்பில் இருந்த அனைவர் குடும்பத்தையும் அதிர்ச்சியில் கலங்கவைத்துள்ளது.

இதுபோன்ற தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய என்ற ecoimbatore Facebook பக்கத்தில் Join பண்ணுங்க  நன்றி.

#www.cinema.sebosa.in | kadalore police death| devil scare | pei payam| devil story  in tamil| Thigil news| true devil story in tamil| police suicide news in tamil| 

Related Videos