எந்த கடவுளை எதற்காக கும்பிட வேண்டும்....

நினைத்தது நிறைவேற

நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடவும், தடங்கல்கள் ஆயிரம் வந்தாலும் சென்ற இடம் தெரியாமல் மறைந்து போய், மனதில் நினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற எல்லாம் வல்ல சிங்கப்பெருமாள் "நரசிம்மன்" சுவாமியை வணங்குங்கள்.

தீரகடனில் தவித்து வருகிறீர்களா

எவ்வளவு பணம் வந்தாலும் கடனை அடைக்க முடியவில்லையே, வருகிற செல்வம் எல்லாம் கடனுக்கு வட்டி கொடுக்கவே பத்த மாட்டீங்குதுனு கவலைல இருக்கறீங்களா? நமக்கு உதவி செய்ய யாரது வருவார்களா? எப்படியாவது இந்த துக்கத்துல இருந்து விடுபடணும்னு ஆசப்படீங்கன்னா "துர்க்கை" அம்மனின் அன்புக்கரங்கள் உங்களுக்காக உள்ளது. மனமுருகி அம்மனை வேண்டுங்கள் கடன் தொல்லையில் இருந்து விடைபெறுங்கள்.

அறிவும், அழகும் பெற

தமிழ் கடவுள், அப்பனுக்கு  பாடம் சொன்ன அறுபடை முருகனை வழிபடுங்கள், அவருடைய அறிவின் ஒளியையும், அகத்தின் அழகையையும் அருளாய் பொழிவார். கண்கண்ட தெய்வம் "முருகன்" அவரை மனதார வழிபட்டால் தீராத வினைகளும் தீரும்.

ஆற்றல், தைரியம் பெற 

ராமனின் நம்பிக்கைக்கு உரியவர், சீதாவை பிரிந்த துயரத்தில் ராமன் இருக்கும் போது அவருக்காக கடல் கடந்து, பல மலைகள் கடந்து சென்று சீதா தேவியை மீட்க பல சவால்களையும், இன்னல்களையும் தைரியமாக தகர்த்து எரிந்த வாயு புத்திரன், வானர பகவானை தரிசித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தடைகளை தகர்த்து எரிவதற்கான ஆற்றலையும், தைரியத்தையும் "ஹனுமான்" அருள்வார்.

செல்வம் பெருக 

16வகையான செல்வங்களையும் பெற்று எல்லா வளங்கலையும் பெற்று நிறைவான வாழ்க்கையினை வாழ எல்லாம் வல்ல "லட்சுமி" தாயை வழிபடுங்கள்.

கலை, கல்வி பெற 

கல்வித்தாயான சரஸ்வதியை வழிபடுங்கள், நம்பிக்கையாக வேண்டிவந்தால் கலை ஆற்றலையும், கல்வியையும் கொடுத்து வாழ்க்கையில் அறிவொளி ஏற்றி வைப்பாள்.

தியானம் சிறக்க,

மன அமைதியை தேடுபவரா? அதற்கு மிக முக்கியமான கருவி தியானம் தான். அத்தகைய தியானம் சிறந்து அதற்கான பலனை பெற "தட்சிணாமூர்த்தி" கடவுளை வழிபடுங்கள்.

தடை நீங்க,

அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவரான யானை முகத்தோனை, ஐந்து கரத்தோனை வழிபடுங்கள், வாழ்க்கையில் வரும் மலை போன்ற தடைகளும், பனிபோல நீங்கிவிடும்.

கஷ்டம் தீர

என்ன முயற்சிகளை செய்தாலும் புதிது புதிதாக கஷ்டங்கள் வருகின்றதா? அணைத்து கஷ்டங்களும் அகன்று போக ஆயிரம் கண்களை கொண்ட "மாரியம்மன்" கடவுளை வேண்டி வணங்குங்கள்.

எல்லா இன்பமும் பெற 

குடும்பத்திலும், வாழ்க்கையிலையும் எல்லா இன்பங்களும் தாண்டவம் ஆட மூவருள் மூத்தவரான "விஷ்ணு" பகவானை வழிபடுங்கள்.

எல்லா தெய்வங்களையும் மனதார முழு நம்பிக்கையுடன் வேண்டினால் உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்கள்(negative vibration) நீங்கி எதிர்மறை எண்ணங்கள் (positive vibration ) உருவாகும் இதனால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.

எங்களுடன்  ecoimbatore என்ற Facebook page- ன் மூலம் இணைந்திருங்கள்.

#How to pray god| in tamil| How to Pray|  powerful prayer in tamil|Hindu Tamil Daily Prayer| சாமி கும்பிடும் முறைகள் எப்படி | Aanmeegam| Devotional story in tamil| 

Related Videos