"இளைஞரை காப்பாற்றிய சிங்கப்பெண்" தன் தோளில் சுமந்து ஒரு உயிரை காப்பாற்றினார்...

தமிழக காவல் துறைக்கு ஓரு சல்யூட்...
சென்னை T.P.சத்திரம் காவல் துறை சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது உயிரைப் பணயம் வைத்து சென்னையில் தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்து வருகிறது காவல் துறை சார்பாக பொது மக்களுக்கு தேவையான உதவிகள் பாதுகாப்பு உள்ளிட்டவை,
காவல் துறை சார்பாக செய்து வரு‌கிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக காவல் துறை ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் அந்த பகுதி பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார்........இன்று காலை சாலையாரம் கீழ விழுந்து பரிதாபமாக கிடந்த ஒருவரை தன்னுடைய தோல் மீ்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இவரது செயல் தமிழக காவல்துறைக்கு ஓரு எடுத்துக்காட்டாக உள்ளது......இவரை போன்ற தன்னலம் கருதாமல் பணியாற்றும் தமிழக காவல் துறைக்கும், அதிகாரிகளுக்கும் மீ்ண்டும் ஒரு சல்யூட்.

பெண் காவலரின் இந்த செயல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மரண தருவாயில் இருந்த இளைஞரை காப்பாற்றிய சிங்கப்பெண் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

தெரிந்து கொள்ளுங்கள்...

இது போன்ற updates- களுக்கு எங்கள் இணையதளத்தை தொடர்ந்து விசிட் செய்யுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை ecoimbatore என்ற Facebook பக்கத்தில் பகிருங்கள் நன்றி.
cyclone news in Tamil| Chennai weather satellite| chennai rain today| Women Police | Kilpauk

Related Videos