அடை ப்ரதமன் (பாயாசம்)

தேவையான பொருட்கள்:

அரிசி அடை  - 1/2 கப்

ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி -  தலா 1/4 டீஸ்பூன்

முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்

இரண்டாம் தேங்காய்ப்பால் -  1/2 கப்

துருவிய வெல்லம் -  1/2 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

முந்திரி+திராட்சை = தேவைக்கு

தேங்காய்ப்பல்- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.

*கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல், முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அடையை லேசாக வறுக்கவும்

*வெல்ல நீர் மற்றும் 2ஆம் தேங்காய்ப்பால் சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிடவும். இடையிடையே கலக்கிவிடவும்.

*அடை வெந்து திக்கானதும் முதல் பால் சேர்த்து கொதிவரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்

*சுவையான அடை ப்ரதமன்/பாயாசம் ரெடி!!

*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதனால் கொஞ்சம் நீர்க்க இருக்கும் போதே இறக்கிவிடவும்

Related Videos