வாங்கிபாத் மசாலா பொடி

இதில் உருளை வறுவல் செய்ததில் மிக நன்றாக இருந்தது.காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

இதில் கொப்பரைத்துறுவல் சேர்க்காததால் ப்ரிட்ஜில் 2 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

தனியா -1 1/2 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்

வெ.உளுத்தம்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 2

காஷ்மிரி மிளகாய்- 4

கிராம்பு -5

பட்டை 1 இஞ்ச் அளவில்- 2

எண்ணெய் -1 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடாயில் எண்ணெய் ஊற்றி முதல் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

*பின் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்த பின் மிளகாயினை சேர்த்து வறுக்கவும்.

*கடைசியாக தனியாவை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.கடாயின் சூட்டிலேயே தனியா வறுபட்டுவிடும்

*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அரைத்த பொடியினை நன்கு ஆறவைத்த பின் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்

Related Videos