உப்பு நார்த்தங்காய்

நார்த்தங்காய் எலுமிச்சை பழவகையை சார்ந்தது.இதன் பழங்கள் பெரியதாகவும்,தோல் தடிமனாகவும் இருக்கும்.

இதில் ஊறுகாய்,சாதம்,பச்சடி என செய்யலாம்.அதிக மருத்துவகுணம் வாய்ந்தது.

இதனை உணவில் சேர்த்துவர வயிற்றுப்புண்,வயிற்றுப்புழு நீங்கும்.பசியை அதிகரிக்கும்.

இதில் மிக சுவையான குழம்புகூட செய்யலாம்.அதனை வேறொருநாளில் பகிர்கிறேன்.

தேவையான பொருட்கள்:

நார்த்தங்காய் -3

கல் உப்பு -தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*நார்த்தங்காயை கழுவி துடைக்கவும்

*அதனை நான்காக கீறவும்.அதனுள் கல் உப்பு வைத்து அடைக்கவும்.

*இதனை மண்சட்டி அல்லது பீங்கான் ஜடியில் போட்டு 3 நாள் ஊறவைக்கவும்.

*3ஆம் நாள் பழம் ஊறி நீர் விட்டிருக்கும்.பழத்தினை மட்டும் எடுத்து தட்டில் வைத்து வெயிலில் காயவைக்கவும்.

*பின் மாலையில் திரும்பவும் உப்பு நீரில் போடவும்.இதே போல் உப்பு நீர் வற்றும் வரைவெயிலில் காயவைக்கவும்.

*பின் ஒரு நாள் முழுக்க பழத்தினை வெயிலில் காயவைத்து எடுக்கவும். 

*சுவையான ஊறுகாய் ரெடி,1 வருடத்திற்கும் மேல் வைத்திருந்து பயன்படுத்தலாம்

Related Videos