ஆவக்காய் ஊறுகாய் |ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் ஊறுகாய் | Andhra Special Mango Pickle

தேவையான பொருட்கள்: 

மாங்காய் - 2 பெரியது

கடுகுபொடி - 3/4 கப்

வரமிளகாய்த்தூள் - 3/4கப்

பூண்டுப்பல் - 1 1/2 டேபிள்ஸ்பூன் + 1 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 3/4 டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 கப் + 1/8 கப்

உப்பு - 3/4 கப்  மைனஸ் 2 1/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*மாங்காயை கழுவி துடைத்து கொட்டையுடன் 2ஆக நறுக்கவும்.

*பின் கொட்டை மற்றும் மெலிதாக இருக்கும் வெள்ளை தோல் இவற்றை நீக்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*நறுக்கிய மாங்காய் துண்டுகள் 3 கப் அளவில் எடுத்துக் கொண்டால் மேற்சொன்ன மற்ற அளவுகள் சரியாக இருக்கும்.

*நறுக்கிய மாங்காய் துண்டுகளை துணியால் ஈரம் போக நன்கு துடைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் மாங்காய் துண்டைகளை எடுத்துக் கொள்ளவும்

*கடுகுப்பொடி, வெந்தயம் மற்றும் பூண்டுப்பல் சேர்க்கவும்.

*மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

* நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்

*சுத்தம் செய்த பாட்டிலில் போட்டு ஊறவைக்கவும்

*மறுநாள் ஊறுகாயை சுவைபார்க்கவும்.உப்பு மற்றும் காரம் குறைந்தால் சேர்க்கவும்.

*இந்த அளவுபடியே செய்தால் எதுவும் சேர்க்க தேவையில்லை.

*ஊறுகாயின் மேலே 1/2 இஞ்ச் அளவு மிந்தந்தால் ஒகே,இல்லையெனில் 1/8 கப் மேலும் நல்லெண்ணெய் ஊற்றவும்

பின் குறிப்பு:

*பயன்படுத்தும் போது ஊறுகாயை சிறிய பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.

*1 வருடம்வரை வைத்திருக்கலாம்.

*ஈரமில்லாத கரண்டியை பயன்படுத்தவும்.

*ஊறுகாயை பாட்டில் அல்லது செரமிக் ஜாடியில் வைத்திருந்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு கெடாமலும்,நிறம் மாறாமலும் இருக்கும்.

*இதில் வெந்தயம் பதில் 3 டேபிள்ஸ்பூன் கறுப்பு கடலையை பயன்படுத்தலாம்

Related Videos