வெண்பொங்கல்&பாம்பே(கடலைமாவு)சாம்பார் | Bombay(Besan) Sambar

பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு  - 3/4 கப்

பால் - 1 1/2 கப்

தண்ணீர் - 2 1/2 கப்

உப்பு - தேவைக்கு

தாளிக்க

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

முந்திரி - தேவைக்கு

பொடியாக நறுக்கிய இஞ்சி -1டீஸ்பூன்

மிளகு -1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பருப்பு, அரிசி, உப்பு, பால் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

கடலைமாவு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

கடலைமாவு - 3 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி -தலா 1 சிறியது

கீறிய பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்

புளிபேஸ்ட் - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்

சீரகம் -1/4 டீஸ்பூன்

பெருங்காயம் -1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*கடலைமாவை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறவைத்து மஞ்சள்தூள்+1 1/2 கப் நீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளியை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கரைத்துவைத்த கடலைமாவை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி 5-6 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

*சிறிதளவு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பார் சப்பாத்தி,பூரிக்கும் நன்றாகயிருக்கும்

Related Videos