பாவ் பன்&பாவ்பாஜி மசாலா

பன் செய்ய
தேவையான பொருட்கள்:

மைதா - 4 கப்
பட்டர் - 1/2 கப்
பால் - 3/4 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*வெதுவெதுப்பான 2 கப் நீரில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.பின் கலவை நன்கு பொங்கியிருக்கும்.

*ஒரு பவுலில் மாவு, உருக்கிய பட்டர், ஈஸ்ட் கலந்த நீர், பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*1 மணிநேரம் கழித்து மாவு 2மடங்காக உப்பியிருக்கும்.மறுபடியும் நன்கு பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.
*பின் மாவை சிறு உருண்டைகளாக தேவையானளவில் எடுக்கவும்.இந்த அளவில் 8 உருண்டைகள் வரும்.

*அவைகளை அவன் டிரேயில் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைத்து ஈரத்துணியால் மூடி 45 நிமிஷம் வைக்கவும்.

*190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.வெந்ததும் அவனில் இருந்து எடுத்து உருக்கிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.

பாவ் பாஜி மசாலா
தேவையான பொருட்கள்:

பாவ் பன் - 8
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
பாவ் பாஜி மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
தோலெடுத்து துண்டாக்கிய உருளை - 3
காலிபிளவர் - 1/4 கப்
பட்டாணி - 1/4 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
பட்டர் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை விளக்கம்:

*குக்கரில் காய்களை தேவையான நீர் சேர்த்து வேகவைத்து நன்கு மசித்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், பாவ் மசாலா மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி மசித்த காய்களை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*நன்கு கொதிததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*கடாயில் பட்டர் விட்டு பாவ் பன்னை 2ஆக கட் செய்து 2 பக்கமும் பொன்னிறமாக டேஸ்ட் செய்து மசாலாவுடன் பரிமாறவும்.

Related Videos