மங்களூர் பன்/ வாழைப்பழ பூரி

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு -2 கப்
கனிந்த வாழைப்பழம்- 2
சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்
தயிர் -1/4 கப்
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
சீரகம்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்+பொரிக்க‌

செய்முறை விளக்கம்:

*மிக்ஸியில் வாழைப்பழம், சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பாத்திரத்தில் கோதுமைமாவு, உப்பு, பேக்கிங் சோடா, சீரகம் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து,மசித்த வாழைப்பழ கலவையும் சேர்த்து பிசையவும்.

*நீர் சேர்த்து பிசைய தேவையில்லை.வாழைப்பழம் மற்றும் தயிரில் உள்ள
 நீரே போதுமானது.

*பிசைந்த மாவினை குறைந்தது  4- 5 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.

*பின் சிறு உருண்டைகளாக எடுத்து பூரியாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*இதனை தேங்காய் சட்னி/சாம்பாருடன் பரிமாறலாம் அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

பின் குறிப்பு:

*மாவினை எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோமோ அந்த அளவுக்கு பூரி உப்பி,மிருதுவாக இருக்கும்.

*முதல்நாளே மாவினை பிசைந்து ப்ரிட்ஜில் வைத்து,மறுநாள் காலையில் கூட பூரியாக சுடலாம்.

*கோதுமைக்கு பதில் மைதாவிலும் செய்யலாம்.

*மாவு பிசையும் போது தண்ணீர் அவசியமில்லை.

Related Videos