வெந்தய களி

தேவையான பொருட்கள்:

வெந்தயம் -100 கிராம்
புழுங்கலரிசி -400 கிராம்
வெள்ளை முழு உளுந்து -2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பனைவெல்லம் -200 கிராம்
நல்லெண்ணெய் -100 மிலி
ஏலக்காய்தூள் -1/2 டீஸ்பூன்
சுக்குபொடி -1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அரிசி மற்றும் உளுந்து இவற்றை ஒன்றாகவும்,வெந்தயத்தை தனியாகவும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

*மறுநாள் வெந்தயத்தை தனியாக வெண்ணெய் மாதிரியும்,அரிசி உளுந்தினை மைய அரைக்கவும்.

*பனைவெல்லதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.மீண்டும் கொதிக்க வைத்து ஏலக்காய்தூள் மற்றும் சுக்குபொடி சேர்த்து இறக்கவும்.

 *அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி பின் தேவையான நீர்  ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைக்கவும்.

*கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்,ஒட்டும் போது நெல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்கவும்.

*இப்போழுது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதோ அல்லது ஈரக்கையால் தொட்டால் மாவு ஒட்டாமல் வந்தாலோ அடுப்பிலிருந்து இறக்கவும்.
*மாவு கையில் ஒட்டினால் மீண்டும் கிளறவும்.

*கிண்ணத்தில் களியை வைத்து அதன்மேல் பனைவெல்லத்தினை ஊற்றி பரிமாறவும்.

Related Videos