ரசவடை | Rasa Vada

வடை செய்ய‌:

பட்டாணி பருப்பு- 1 கப்

காய்ந்த மிளகாய்- 6

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/4 கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

உப்பு + எண்ணெய் -தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்தபின் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்

*சாதரணமாக வடைக்கு அரைப்பதுபோல் கொரகொரப்பாக அரைக்காமல் ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்களை கலந்து சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ரசம் செய்ய‌:

இந்த ரசம் மசாலா செய்வதற்கு,அரைதெடுத்த மொத்த மசாலாவும் நெல்லிக்காயளவு மட்டுமே இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

தக்காளி ‍- 2

புளிகரைசல்- 2 கப்

நீர்- 1 கப்

உப்பு- தேவைக்கு

பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்

கடுகு -1/4 டீஸ்பூன்

எண்ணெய்- 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

நறுக்கிய கொத்தமல்லி -தேவைக்கு

மசாலா செய்ய:‌

மிளகு -1/2 டீஸ்பூன்

சீரகம்- 1/2 டீஸ்பூன்

தனியா- 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 1

மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

பூண்டுப்பல்- 10

செய்முறை விளக்கம்:

*மிளகு+சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் இவற்றை சற்றே கரகரப்பாக பொடித்த பின் கறிவேப்பிலை மற்றும் பூண்டினை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்ததும் அரைத்த மசாலா மற்றும் பெரிய துண்டுகாளாகிய தக்காளி சேர்த்து வதக்கவும்

*தக்காளியின் மேல்தோல் மட்டும் சற்று பிரிந்தாற்போல் வந்ததும் புளிகரைசல், உப்பு மற்றும் நீர் சேர்க்கவும்

*ரசம் நுரைத்து வரும் போது பெருங்காப்பொடி மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ரசவடை செய்ய‌:

*ரசத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் ஆறிய வடைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

*பின் அப்படியே 2மணிநேரம் ஊறவைத்தால் வடைகள் 2மடங்காக உப்பியிருக்கும்.

*லேசாக சூடுபடுத்தி ரசவடையினை சூடாக பரிமாறவும்.

Related Videos