ஐயங்கார் புளியோதரை | iyengar puliyodharai

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 3 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சாதத்தில் கலக்க
பொடித்த மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

புளிகாய்ச்சல் செய்ய

கெட்டியான புளிகரைசல் - 1 கப்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
வேர்க்கடலை - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு+வெந்தயம்+சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
 *பின் வேர்க்கடலை+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
 *கெடியான புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 *பச்சை வாசனை அடங்கி குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
 *மறுநாள் காலையில் சாதத்தை வடித்து ஆறவைத்து நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

*சிறிது புளிகாய்ச்சலை சேர்க்கவும்.
 *பொடித்த மிளகினை சிறிது எண்ணெயில் கலந்து சேர்க்கவும்.நான் அப்படியே மிளகினை சேர்த்து விட்டேன்.
 *அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறவும்.
*சுவையான புளிகாய்ச்சல் ரெடி!!

Related Videos