மட்டன் பிரியாணி1 | Mutton Biryani

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பிரியாணி மசாலாபொடி - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
எலுமிச்சை பழம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2

செய்முறை விளக்கம்:

*மட்டனில் சிறிது உப்பு, 125 கிராம் தயிர், கரம் மசாலா மற்றும் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து முதல் நாள் இரவே பிசைந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.

*வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*ஊறவைத்த மட்டனை அப்படியே குக்கரில் நீர் சேர்க்காமல் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரிசியை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனை தனியாக வைத்து நீரை அளக்கவும்.

*அதே பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*தேங்காயைத்துருவி இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.
*வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், பிரியாணி மசாலா, புதினா கொத்தமல்லி மற்றும் மீதமுள்ள தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வேகவைத்த மட்டனை போட்டு வதக்கவும்.4 கப் அரிசிக்கு 6 கப் அளவு நீர் ஊற்றவும்.

*மட்டன் வேகவைத்த நீர் அளந்து ஊற்றவும் மற்றும் தேங்காய்ப்பால்+தேவைப்பட்டால் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது வறுத்த அரிசியைப் போட்டு உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது 190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்தெடுக்கவும்.
*ஏலக்காயை பொடிசெய்து பிரியாணியில் தூவி கிளறி பரிமாறவும்.

Related Videos