திருவாதிரை களிகுழம்பு | Thiruvathirai Kali Kuzhambu

இதில் சேனைக்கிழங்கு ,மஞ்சள் பூசணிக்காய், ப்ரெஷ் அல்லது டிரை மொச்சை, அவரைக்காய்,சேப்பங்கிழங்கு,வாழைக்காய்,சக்கரைவள்ளிக்கிழங்கு,கொடிவகை காய்கள் என 7 காய்கள் சேர்க்கலாம்.

நான் சேர்த்திருப்பது காய்ந்த 1/4 கப் மொச்சை,1 சிறிய உருளை,1 சிறிய சக்கரைவள்ளிகிழங்கு,1/4 கப்  மஞ்சள் பூசணி,1/4 அவரை துண்டுகள்,சிறிய வாழைக்காயில் பாதி, 1/4 கப் சேனைக்கிழங்கு துண்டுகள்

தேவையான பொருட்கள்: 

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட்  - 2
பீன்ஸ் - 10
உருளைகிழங்கு  - 2 பெரியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌:

பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை  -1
ஏலக்காய் - 2
எண்ணெயில் வதக்கி அரைக்க‌
இஞ்சி துண்டுகள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4

செய்முறை விளக்கம்:

*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*தேங்காயை துருவி முதல் பால் 1/2 கப்,2ஆம் பால் 3/4 கப் மற்றும் 3ஆம் பால் 1 கப் எடுக்கவும்.

*காய்களை நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.

*பின் காய்கள் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், உப்பு மற்றும் 3 ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.

*3/4 பாகம் காய்கள் வெந்ததும் 2ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.

*காய்கள் முழுவதும் வெந்ததும் அரைத்த பச்சை மிளகாய் விழுது மற்றும் வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் 1ஆம் பால் சேர்த்து நுரை வரும் போது இறக்கவும்.

*சூடு சிறிது அடங்கியதும் எலுமிச்சை சாறு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

*இதனை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு:

*1ஆம் பால்  சேர்த்ததும் சொதியை கொதிக்கவிடக்கூடாது.

7 வகை காய்கள் - மேலே சொன்ன அளவில்

புளிகரைசல்- 1/2 கப்
உப்பு -தேவைக்கு

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் -7

கடலைபருப்பு- 2டீஸ்பூன்
வெ..பருப்பு - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்

மிளகு -1 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்- 3/4 டீஸ்பூன்

கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை விளக்கம்:

*மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

*குக்கரில் காய்களை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி,தேவையான நீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வருத்து நைசாக அரைக்கவும்.

*காய்கள் வெந்ததும் புளி கரைசல்உப்புவேகவைத்த மொச்சை மற்றும் அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்து கெட்டியாக வரும் போது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.

Related Videos